மாநகராட்சி 10வது வார்டில் போர்வெல் அடிபம்பை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு : நடவடிக்கை எடுக்கள் இந்து முன்னணி கோரிக்கை
உறையூர் கோ அபிஷேகபுரம் மண்டல் 10 வார்டு வடிவேல் நகர் முதல் தெருவில் அங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் அந்த ஏரியாவிற்கு மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்டிருந்த ஆழ்துளை போர்வெல் அடி பம்பை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார் மற்றும் தரைத்தளம் போட்டு அடி பம்பை உபயோகிக்க முடியாத அளவுக்கு ஒரு நபர் பண்ணி உள்ளார் இந்த போர்வெல் அடிபம்பு மக்கள் பயன்பாட்டில் உள்ளதா இல்லையா அப்படி இருந்தாலும் அந்த வார்டு கவுன்சிலர் தினந்தோறும் அந்த ஏரியாவுக்கு செல்வதில்லை அவர் கண்ணில் இந்த போர்வெல் இந்த இடம் அவர் பார்க்கவில்லையா இந்த சம்பவம் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்ததா இதை உடனடியாக அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு உள்ள அகற்றிவிட்டு அடி பம்பு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இல்லையென்றால் அந்த அடி பம்பு வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் இதை உடனடியாக மாநகராட்சி அந்த இடத்தை பார்வையிட்டு சரி செய்து தருமாறு ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இந்து முன்னணி களத்தில் இறங்கும் என்பதே இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்