போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி – விழிப்புணர்வு பேரணி
மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மலையடிப்பட்டி ஊராட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. அழகுமணி, திரு. ஞானப்பிரகாசம் தூய்மை பாரத இயக்கம் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. இராமலிங்கசாமி ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.