நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரகப் பகுதிகளில் பசுமையும், தூய்மையும் உருவாக்கின்ற வகையில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வே.பிச்சை, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி ஆகியோர் உள்ளனர்.