திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர் கோயில் ரயில்வே மேம்பாலத்தில், இன்று காலை பெங்களூரில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற இன்னோவா கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவர் ஷேக் ஜீலான் பாஷா (28) உயிரிழந்தார். காரில் பயணித்த, காரைக்குடியை சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவரும் படுகாயத்துடன், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.