புத்தூர் கிளை நூலகத்திற்கு புத்தக அலமாரி வழங்கல்
55 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகத்திற்கு புத்தக அலமாரி வழங்கல் விழா நூலகத்தில் நடைபெற்றது.
திருச்சி புத்தூர் வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலையில் நூலகர் புகழேந்தி வசம் வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் தலைவர் தனபால் இரும்பிலான ஆறு அடுக்கு புத்தக அலமாரியினை வழங்கினார். வாசவி கிளப் இன்டர்நேஷனல் நிகழ்ச்சி அமைப்பாளர் உலகநாதன், குழு இயக்குனர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.