இந்தி திணிப்பு எதிர்ப்பு – ஒற்றை ஆட்சிக்கு எதிராக பொது மாநாடு

0 213
Stalin trichy visit

 

இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட்- லெனிஸ்ட் (விடுதலை) பொது மாநாடு – திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

திருச்சி நவ 25 திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள அரிஸ்டோ மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (விடுதலை)சார்பில் “இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் போராட மாற்றத்திற்காக” என்ற தலைப்பில் பொது மாநாடு மாநில செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்புரையை மாநில பொதுச் செயலாளர் தீபங்கர், விடுதலை சிறுத்தை கட்சியின் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உறுப்பினர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜு ஆகியோர் வழங்கினர்.

பொதுக் கூட்ட விளக்க உரையை மத்திய கமிட்டி நிர்வாகிகள் பாலசுந்தரம்,பாலசுப்ரமணியன் சந்திரமோகன் வாழ ஆசை தம்பி ஆகியோர் வழங்கினர்.

பொதுக் கூட்டத்தில் பாஜக ஆர் எஸ் எஸ் மதவிருப்பு அரசியலை அமலாக்க ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர இந்திய சமூகத்தில் பண்பாட்டுத்தன்மையை கூட்டாட்சி தன்மையை சர்வாதிகாரத்தில் முயற்சிக்கிறது இதனை முறியடிப்போம் மாநில உரிமையை மீட்போம் ஒற்றை ஆட்சிக்கு எதிராக கூட்டாட்சி முறைக்காக போராடுவோம்,

ஆளுநர் வழியாக தமிழ்நாட்டில் இணையான அரசியல் அதிகாரத்தை செலுத்த முயற்சிக்கும் பாஜக அரசே கண்டிப்பதுடன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தங்களை பரப்புரை செய்யும் ஆளுநர் பதவி விலக வேண்டும்,

தொழிலாளர்கள் போராடி பெற்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும், அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் அரசு சார் நிறுவனங்கள் உள்ள வேலை வாய்ப்புகளில் முழுமையாக தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு பலகிட வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் ஞான தேசிகன் மாநில குழு உறுப்பினர் சிம்சன் உட்பட 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் (விடுதலை) பொது மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உரையாற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.