5 மாவட்டங்களின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர்,அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் தற்போது துவங்கியது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்,கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.