தெற்கு புறநகர் அதிமுக அலுவலகத்தில் அறிஞர் அண்ணா நினைவு நாள்
பேரறிஞர் அண்ணா 54வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.S.ராவணன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.K.D கார்த்திக் முன்னாள் அரசு வழக்கறிஞர் சின்னத்துரை இலக்கிய அணி செயலாளர்T.முருகன், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சூரிய அழகர், துவாக்குடி நகரத் துணைச் செயலாளர் கணபதி, முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலமூர்த்தி, திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் பொய்கை த. முருகா, வட்டக் கழக செயலாளர் கோல்டன் A ஆபிரகாம், காட்டூர்மணி மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.