அதிமுக நிர்வாகி சகாதேவ் பாண்டியன் மறைவு
திருச்சி, மார்ச் 10 திருச்சி சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவரும், திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளருமான சகாதேவ் பாண்டியன் இன்று காலை மாரடைப்பால் மறைவுற்றார். இவர் அதிமுக கவுன்சிலராகவும் இருந்தவர். தகவலறிந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மறைந்த சகாதேவ் பாண்டியன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.