12ம் வகுப்பு தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது – திருச்சி அண்ணா சிலையில் உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் 260 பள்ளிகளை சேர்ந்த 34,392 மாணவர்கள் சுமார் 133 தேர்வு மையங்களில் இன்று தேர்வெழுத உள்ளனர்.
133 தேர்வு மைய முதன்மை கண்காணிப் பாளர்கள் – 133 துறை அலுவலர்கள் – 20 வினாத்தாள் கட்டுப்பாளர்கள் – 30 வழித்தட அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
மேலும் 229 பறக்கும் படை கண் காணிப்பாளர்கள் இந்த பணியில் உள்ளனர்.