மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிக்கொடுங்கள்… சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ இனிகோ கோரிக்கை..!
சென்னை.மார்ச்.29, திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலிவார்டு, இப்ராஹிம் பார்க் அருகில் அமைந்திருந்த கொடும்பல் பிரசவ மருத்துவமனை, ஈ.பி.ரோடு, பீரங்கி குளம் தெரு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது மூடப்பட்டிருக்கும் கொடும்பல் பிரசவ மருத்துவமனை இருந்த அந்த இடத்தில், பலரும் பயன் பெறும் வகையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் இன்றைய சட்டமன்ற கேள்வி-பதில் நேரத்தில் கோரிக்கை வைத்தார் திருச்சி கிழக்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.