பொது மக்களுக்கு ஆக்சிஜன் அளவு பரிசோதனை முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம், கரிகாலி கிராமத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கன்வாடி பணியாளர்கள் வீடுவீடாக சென்று கிராம மக்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தா.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், வட்டாட்சியர் சந்திரதேவநாதன் ஆகியோர் உள்ளனர்.