மகாராஷ்டிரா மாநில அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துரையாடினார்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் சந்தித்து உரையாடினார்கள்.
மகாராஷ்டிரா மாநில அரசு ஒருங்கிணைத்திருந்த ‘இஸ்ரோவிற்கு செல்லலாம்!’ எனும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மாணவர்கள் 22/04/2023 அன்று ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ள PSLV C55 நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்கள். Space Kidz India அமைப்பின் தலைவர் ஶ்ரீமதி கேசன் தலைமையில் அமைச்சர் அவர்களை சந்தித்தார்கள். இந்நிகழ்வில் அம்மாநில அரசு பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
