காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகள் குறித்து கலந்தாய்வு
திருச்சி, ஏப்.26 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், காணொளி காட்சி வாயிலாக சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களின் ஆட்சியர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.