பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
திருச்சி, மே31 திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் பள்ளி வானங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், துணை ஆட்சியர் பயிற்சி செல்வி ஐஸ்வர்யா,, ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, கென்னடி, போக்குவரத்து ஆய்வாளர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.