வேளாண்மை கண்காட்சி முன்னேற்பாடு பணி: அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி, ஜூலை 25 திருச்சி கேர் பொறியியற் கல்லூரியில் வரும் 27 ஆம் தேதி வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம் 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.