புதிய அங்கன்வாடி மையம்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி, ஆக.5 புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

2022-2023ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் வட்டக் கழக செயலாளர் ரங்கநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்