கலைஞர் பிறந்த நாள் – ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு திமுக 49வது பகுதி வட்ட செயலாளர் போட்டோ கமால் ஏற்பாட்டில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் 5கிலோ அரிசி சத்தான கீரை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 1000 பேருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகர செயலாளர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,பகுதி செயலாளர் காஜாமலை விஜி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…