அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருச்சி, டிச. 8 திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி கண்ணனுர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.