காவிரி இலக்கியத் திருவிழா: அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, பிப். 24 திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற காவிரி இலக்கியத் திருவிழா 2024 விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காவிரி இலக்கியத் திருவிழா போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாப்பேருரையாற்றினார்.
இந்நிகழ்வில், பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, அருட்சகோதரி முனைவர் பா.ராஜகுமாரி, மண்டலத்தலைவர் மதிவாணன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.