அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மீலாது விழா

0 333
Stalin trichy visit

திருச்சி, பிப். 24  அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், மாபெரும் மீலாது விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாபெரும் மீலாது நபி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் நடைபெற்றது.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் சாதிக் பாஷா பாவா, நபிகள் நாயகம் அவர்களின் பண்புகளையும், இன்றைய அரசியல் சூழல் குறித்தும் சிறப்புரை ஆற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், நத்ஹர்வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலர் அல்லாபக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில், அதிமுகவுடன் இணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது, இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5% லிருந்து 5% சதவீதமாக உயர்த்த வலியுறுத்துவது.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் மனு கொடுப்பது.

விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச உற்பத்தி பொருள் விலை நிர்ணயம் செய்ய குரல் கொடுப்பது.  நாடாளுமன்ற தேர்தலில் CAA வை எதிர்ப்பது மற்றும் ரத்து செய்ய அனைத்து மக்களிடமும் ஆதரவு கேட்பது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தி, EVM மிஷினை அப்புறப்படுத்தி மக்களாட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் அகில இந்திய முஸ்லிம் லீக் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மஹது, மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப், மாவட்ட பேச்சாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.