ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் குமர குருபரன். இவரது மனைவி ரம்யா (36).
இவர்களுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டு மகன் உள்ளனர். அவரது கணவன் குமர குருபரன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.