திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்கும் முயற்சி
திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன், என்பவருக்கு சொந்தமான இடத்தினை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெற்றி செல்வன் தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றால் அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.