கோட்டப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சி, ஆக.13 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு முதல்வரின் மக்களுடன் முதல்வர் முகாமினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் துறையூர் வட்டாட்சியர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம், மாராடி ஆகிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.