மனவளர்ச்சி குன்றிய இளம் பெண் பாலியல் சீண்டல் ஒருவர் கைது
மணப்பாறை அருகே மனவளர்ச்சி குன்றிய இளம் பெண் பாலியல் சீண்டல் ஒருவர் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன் இவரது மகள் 20 வயது மனவளர்ச்சி குன்றிய பெண் அதே பகுதியில் துருக்கன் குளம் பகுதியில் ஆடு மேய்க்க சென்று வருவது வழக்கம் தனிமையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை நோட்டமிட்டபிச்சை மணியாரம் பட்டியைச் சேர்ந்த ஜான் என்பவரது மகன்ஜார்ஜ் ஞான ஸ்டீபன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணின் தந்தை ராமச்சந்திரனிடம் மனவளர்ச்சி குன்றிய பெண் கூறியதை அடுத்து ராமச்சந்திரன் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஜார்ஜ் ஞான ஸ்டீபன் (30) என்பவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக் ஷோ வழக்கு பதிவு செய்து ஜார்ஜ் ஞான ஸ்டிபனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.