குடிநீர் கலங்கல் – கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் பம்ப் ஹவுசில் எம்எல்ஏ ஆய்வு!
குடிநீர் கலங்கல் – கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீரங்கம் பம்ப் ஹவுசில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி உட்பட்ட பாலக்கரை, மலைக்கோட்டை, வரகனேரி, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் கலங்களாக வருவதாக அப்பகுதி மக்கள் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜுடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த எம்எல்ஏ, இன்று ஸ்ரீரங்கம் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.