ஆதரவற்ற நபர்கள் அனாதை இல்லத்தில் ஒப்படைப்பு
திருச்சி,பிப்.22 திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற நபர்கள் அனாதை இல்லத்தில் ஒப்படைப்பு
திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில் இன்று உதவி ஆய்வாளர் சந்தீப் மற்றும் படை அங்கத்தினர் வழக்கமான ரோந்து பணியின் போது 01 மனநலம் குன்றிய பெண் மற்றும் 01 முதியவர் திருச்சி ரயில் நிலைய பிரதான நுழைவாயில் பகுதியில் நடமாடுவதைக் கவனித்தனர். பின்னர் விசாரணையில், அவர்களின் பெயர் முகவரி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முருகானந்தம் என தெரிய வந்தது. மனநலம் குன்றியவர் அவரது பெயர், முகவரி தெரிவிக்கவில்லை. மேற்குறிப்பிட்டவர்கள் பத்திரமாகப் மீட்கப்பட்டு திருச்சியில் துறையூரில் உள்ள தாருல் முஹப்பா அனாதை இல்ல அறக்கட்டளையில் மேலதிக பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஒப்படைக்கப்பட்டனர்.