பகத்சிங் நினைவு நாள் : சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியினர் உறுதி ஏற்பு
திருச்சி, மார்ச் 24 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவீரன் பகத்சிங் நினைவு நாளில் சிபிஜ(எம்.எல்) கட்சியின் சார்பாக உறுதி ஏற்பு நிகழ்வு மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி ரோடு கடைவீதி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ சங்க செயலாளர் R. கமல் தலைமையிலும் பெரியார் சிலை ஆட்டோ ஸ்டாண்ட் உறுதியேற்பு நிகழ்விற்கு ஆட்டோ சங்க தலைவர் அப்பாஸ் தலைமையிலும் உறுதியேற்கப்பட்டது.
நிகழ்வில் CPI(ML) நகர செயலாளர் P.பாலு மற்றும் ஒன்றிய செயலாளர் M.தங்கராஜ், மாவட்டகுழு உறுப்பினர்கள் மெக் S. இளையராஜா கே.கருப்பையா மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.