திருச்சி வாசன் நகரில் நகை, பணம் திருட்டு
திருச்சி மே 8 திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாசன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் எடமலைப்பட்டி புதூர்பகுதியில் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றுவீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று விட்டார். இதையடுத்து பூட்டிருந்த
வீட்டின் கதவை உடைத்து பீரோவை திறந்து அதிலிருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சோமரசம்பேட்டை போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை கண்டறிய போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.