கே.கே. நகரில் பூட்டிய வீட்டில் கொள்ளை முயற்சி
திருச்சி மே 8 திருச்சி கே கே நகர் மகாலட்சுமி நகர், இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் புரூனோ (வயது 63) இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்ட சென்றார். பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்பினார் அப்போது அவரது வீட்டின் கதவு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது எந்த பொருளும் திருடு போகவில்லை. இதுகுறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்