முதியவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மே 8- திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துப்பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 64) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து பின்னர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது இதனால் மனமுடைந்த நடராஜன் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார், இதுகுறித்து அவரது மகன் பெரியசாமி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.