புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மேல் சிகிச்சை பெற நிவாரணத் தொகை வழங்கல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் நகராட்சி பகுதியில் உள்ள அரசமர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் கல்பனா சம்பத் என்பவர் கருப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவதற்கு நிவாரணத் தொகை கோரி
உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் அளித்த மனுவின் கோரிக்கையானது ஏற்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 50,000 மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வழங்கினார் .