ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு
திருச்சி, ஜூன் 20 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள எஸ் ஆர் அம்மன் அவன்யூவில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 2 ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாளும் மண்டல பூஜை நடைபெற்றது. இந்த மண்டல பூஜை நிறைவு நாள் 19ந் தேதி நேற்றிரவு நடைபெற்றது
விழாவில் சாந்தி மணிகண்ணன், பாபு ராஜஸ்ரீபா,சுரேஸ் ஜீவா, மூர்த்தி,எஸ் ஆர் அம்மன் அவன்யூ பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இவ்விழா ஏற்பாடுகளை சிவகுருநாதன் கீதா, மற்றும் எஸ் ஆர் அம்மன் அவன்யூ பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.