திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஓ.எப்.டி என்னும் பெயர் மாற்றம்

0 544
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு அருகே உள்ள பகுதியில் கடந்த 1966ம் ஆண்டு ஓ.எப்.டி. எனும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கொல்கத்தாவில் உள்ள ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் கீழ் இயங்கி வந்துள்ளது.

இதேபோல அட்சய பிபிஎம் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ அமைச்சகம் ஆயுத தொழிற்சாலை வாரியத்தை கலைத்து விட்டது. மேலும் இந்தியா முழுவதும் இயங்கிவந்த 41 தொழிற்சாலைகளும் அதன் உற்பத்தியை பொருத்து ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஒட்டு என்னும் பெயரில் இயங்கி வந்த தொழிற்சாலை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேலும் one8 என்று அழைக்கப்படும். மேலும் இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியை பிபி என்று இருந்ததை ஐஜிபி என்று மத்திய அரசு பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பெயர் மாற்றத்தினால் அருகே உள்ள ஊராட்சி பகுதிகளான நவல்பட்டு புதுத்தெரு, சோழமாதேவி பர்மா காலனி, சூரியூர், காணப்பட்டி, பூலாங்குடி, பாரதி நகர் மற்றும் அதன் விரிவாக்கம் பகுதிகளான 20 ஊர்களில் அஞ்சல் முகவரியில் ஓ என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் இதனை பெயர் மாற்றும் சூழல் உருவாகி உள்ளதால் அருகே உள்ள தபால் நிலையங்களில் இது குறித்து எடுத்துக்கூறி இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.