கரூர் துயரம் : த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருச்சி, செப்.29 கரூர் விவகாரம் – தவெக பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் என மூன்று பேர் மீது 5 பிரிவின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
105, 110, 125 b, 223 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
105 – கொலைக்கு சமமான குற்றமற்ற கொலைக்குத் துணை போதல்.
110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சித்தல்.
125 b மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்து அலட்சியப் போக்குடன் செயல்.
223 அதிகாரிகளின் உத்தரவை கீழ்படியாமல் இருத்தல்.
Tnppdl-
பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல்.
கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.