வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, டிச.10 திருவண்ணாமலை பரயம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22 ) இவர் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்து தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த பழக்கடை அருகில் மரத்தில் விக்னேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் .
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.