முசிறியில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, டிச.29 முசிறியில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்யின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் மலரஞ்சலி மற்றும் அன்னதானம் வழங்கினர்..
திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டி பகுதியில் தேமுதிக கட்சி நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான, நடிகர் விஜயகாந்த்யின் இரண்டாம் ஆண்டு தின குருபூஜை விழா
முசிறி நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது, தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம் மற்றும் ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினார்கள், தொடர்ந்து ஏராளமான ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.