திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

0 15
Stalin trichy visit

திருச்சி, மே 12 திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினர் திங்கள் கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத் தின் 4ஆவது நடைமேடைக்கு திங்கள்கிழமை வந்த சென்னை குருவாயூர் விரைவு ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் அஜித் குமார் தலைமையிலான பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.அந்த ரயிலின் முன்பதிவற்ற பெட்டியில் கேட்பாரற்றுக்கிடந்த 3 பைகளை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். அதில், ரூ. 3 லட் சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பைகள் யாருடையது என்றுத் தெரியவில்லை.

இதையடுத்து கஞ்சா இருந்த பறிமுதல் செய்த பைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கஞ்சா யாருக்காக, யாரால் எடுத்து வரப்பட்டது என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.