அதிக மழையால் இன்று பெருமாள் மலையில் மண்சரிவால் பாறை சாலையின் நடுவே விழுந்தது.
திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் துறையூர் பகுதியில் காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்து சுமார் 5 மணி நேரம் மழை கொட்டியது.

இந்தநிலையில் பெருமாள் மலை பகுதியில் உள்ள பாறை சாலையின் நடுவே சரிந்து விழுந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.