போதை மாத்திரைகள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, ஜூலை 27 திருச்சி இபிரோடு வேதாத் திரிநகரை சேர்ந்தவர் கணேஷ் பாண்டியன்(வயது 21). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை மாத்திரை கள்விற்றவழக்கில்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். இவரை ஜாமீனில் வெளியே விட்டால் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடு வார் என்பதால் கணேஷ் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். அந்த உத்த ரவு நகல் திருச்சி மத்திய சிறை யில் உள்ள கணேஷ் பாண் டியனிடம் நேற்று வழங்கப்பட்டது.