தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி ‘இல்லம் தேடி கல்வி’ எனும் மகத்தான திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்து, பயிற்சி பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதள தொடக்க விழாவில் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநில திட்ட இயக்குனர் சுதன், முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.