அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்க த.வெ.க. அரசு முயற்சி : தொ.மு.ச பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
திருச்சி, ஆக. 26 திருச்சியில் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒன்றிய பா.ஜ.க அரசும், மாநில அரசும் தொடர்ந்து தொழி லாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி அவர்களின் உரிமை களை பறிக்கிறது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தாமல் அதை புறக்கணிக்கிறது. த.வெ.க அரசு அனைத்து துறைகளிலும் தனியார் மயத்தை புகுத்துகிறது என்று கூறினார்.