7 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்பு
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த திருமுருகன் நகர் குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததை அப்பகுதியினர் பார்த்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய போலீசார் திருமுருகன் நகர் பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் நவீன கருவிகள் கொண்டு அந்த பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதையடுத்து அப்பகுதியினர் நிம்மதி அடைந்தனர்.