ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு, வேஷ்டி சேலைகளை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர ப.குமார் வழங்கினார்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்… திருச்சி, திருவெறும்பூர் தொகுதி, அசூரில் உள்ள இனிக்குரு டிரஸ்ட்.ன் சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.ப.குமார் B.Sc., BL., Ex.MP., அவர்கள் பங்கேற்று ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, வேஷ்டி சேலை மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் திரு.M.P.ராஜா BBA., LLB., அவர்கள் மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.S.S.ராவணன், திரு.SKD.கார்த்திக் அவர்கள்.. துவாக்குடி நகர கழக செயலாளர் திரு.S.P.பாண்டியன், பகுதி கழக செயலாளர் திரு.M.பாலசுப்ரமணியம், திரு.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ் அவர்கள். மற்றும்
மாவட்ட அணி செயலாளர்கள் VDM.அருண் நேரு, S.ராஜமணிகண்டன், N.கார்த்திக், M.சுரேஷ்குமார், மற்றும்
கழக முன்னோடிகள் ஜெ.பாலமூர்த்தி, முருகானந்தம், அண்ணாதுரை, சூரியூர் அழகர், பொன்ராமன், பொய்கைக்குடி முருகா, சுப்ரமணியன், அபிமன்யு, ரோஷன் அலி, மற்றும் ஒன்றிய கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.