மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்தார். இதனையடுத்து மதிமுகவினர் தீப்பெட்டி சின்னத்துடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க மறுத்தது. அதனால் ஏதேனும் ஒரு சுயேச்சை சின்னத்தில் போட்டிய துரை வைகோ முடிவு செய்திருந்தார்.