திருச்சி மாநகராட்சியில் கொடுங்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று15.06.2023 காலை 11 மணிக்கு மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.