திருச்சி மாநகராட்சியில் போதை பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஆக.11 போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் தொடர்ச்சியாக திருச்சி மாநகராட்சி மய்ய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் பெருந்திரள் போதைப் பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை நோக்கி போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மேயர் மு.அன்பழகன் வாசித்தார். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்று கொண்டார்கள்.