திருப்பரங்குன்றத்தில் முருகனை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க. : சீமான் பேட்டி

0 132
Stalin trichy visit

திருச்சி, டிச.13  மக்களுக்காக எந்த போராட்டமும் செய்யாதவர்கள் தான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என போராடுகிறார்கள் – திருச்சியில் சீமான் பேட்டி

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,

தமிழ்நாட்டை இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டு வருகிறார்கள்..
அனைவரும் கட்சி அரசியல், தேர்தல் அரசியலை தான் அனைவரும் செய்து வருகிறார்கள்.. மக்கள் அரசியலை யாரும் செய்யவில்லை.

மாதம் ஆயிரம் பெறக்கூடிய நிலையில் பெண்களை வைத்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையை இப்போது எதற்காக கொடுக்க வேண்டும். ஏமாறுவார்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் இந்த ஆட்சியில் இதுவரை ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு திட்டத்தை இந்த அரசு கூறட்டும்.

கேடுகெட்ட கேவலமான ஆட்சியை செய்து கொண்டு இது சாதனை என்று இந்த அரசு சொல்கிறது நான் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் என்னுடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டார்களே என்று இந்த அரசை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்..

அமைச்சர் கே.என்.நேரு துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அமலாக்கத்துறை சோதனை வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
திருப்பரங்குன்றத்தில் திடீரென முருகன் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தலுக்காகவே அதை செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டும் என கூறுபவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்காக எந்த போராட்டமும் செய்யாதவர்கள் தான்.
அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தார்கள் தற்போது முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்.
பிரச்சனையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் அறுவடை செய்ய பார்க்கிறார்கள்.
வழிபடும் தெய்வம் வழிப்பட தான் இருக்க வேண்டும் அரசியலுக்காக இருக்க கூடாது.
இந்த விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இரு தரப்பையும் அழைத்து பேசி தீர்க்கவே உத்தரவிட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறையால் தான் இந்த பிரச்சனை பூதாகரமானது.
பாரதியை நான் எங்கும் பேசுவேன். நாளை திமுகவோ அல்லது திராவிட இயக்கமோ பாரதி குறித்து கூட்டம் நடத்தினால் அதிலும் பேசுவேன்.  நான் எங்கு நிற்கிறேன் என பார்க்காதீர்கள் என்ன பேசுகிறேன் என பாருங்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.கவிற்கு சதித்திட்டம் தீட்டி கொடுப்பதே திமுக தான். இந்த பிரச்சினை மூலம் சிறுபான்மை வாக்குகளை பெறவே திமுக இதை செய்கிறது.
பா.ஜ.க வந்து விடும் என கூறுபவர்கள் பா.ஜ.க வராமல் நாங்கள் பார்த்து கொள்வோம் என கூறுவதில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.