சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன் மீது வழக்கு பதிவு
திருச்சி ஆக 27 திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுவன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதேபோல் அந்த சிறுவன் பலமுறை அந்த சிறுமையை பாலியல் ரீதியாக சீண்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தனது 26 ந்தேதி சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது இதுகுறித்து திருவரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.