திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பேட்டரி வாகனம் : ஜனனி மகேஸ் வழங்கினார்
திருச்சி, ஆக.28 திருச்சி ஏர்போர்ட் பயணிகள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளார்.
அதனை இன்று விமான பயணிகளின் பயன்பாட்டிற்காக அவரது இணையர் ஜனனி மகேஷ் அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்வில் ஏர்போர்ட் இயக்குனர் ஞானேஸ்வரா ராவ், மேலாளர் சுனிதா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.